377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

377 வழக்கில் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து கல்வி வல்லுனர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பல கல்வி வல்லுனர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது

பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது

இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒரு தாயின் பதில் – சமுதாயத்தை எதிர்கொள்வது, உறவினர்களை சமாளிப்பது பற்றி

“இந்த சமுதாயத்திற்கு நல்ல பொறுப்பான குழந்தைகளை நான் கொடுத்து இருக்கிறேன். நாலு பேர் என்ன நினைத்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை.. நான் என்றும் என் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன்.” என்கிறார் ஜானகி வாசுதேவன்